நீர்மோர் வழங்கல்

ஓசூர், மே 9: ஓசூர் பஸ் நிலையத்தில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதில் 17வது நாளாக பொதுமக்களுக்கு நீர்மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஓசூர் மாநகராட்சி 8வது வார்டு வட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஓசூர் பகுதி செயலாளர்கள் அசோக ரெட்டி, ராஜு, முன்னாள் நகர செயலாளர் நாராயணன், தில்ஷத் ரகுமான், பொதுக்குழு உறுப்பினர் குமார், பகுதி துணை செயலாளர் நவீன், நிர்வாகி பிரசாந்த், மாவட்ட மகளிரணி நிர்வாகி ஜமுனா, ஓட்டுனர் அணி மாவட்ட நிர்வாகி பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’