நீரில் மூழ்கி 2 பேர் பலி

பொன்னேரி: பழவேற்காடு அழகிய பிரபல சுற்றுலாப்பகுதி. இங்கு அழகிய கடற்கரை, கலங்கரை விளக்கம், புனித மகிமை மாதா திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களைக்காண சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வது வழக்கம்.இந்நிலையில் சென்னை, அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45) பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (20) கல்லூரி மாணவன். இருவரும் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி சென்றனர். பழவேற்காடு அருகே உள்ள முகத்துவாரம் பகுதியில் படகு சவாரி சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்துள்ளனர். இதில் சம்பவ இடத்தில் இருவரும் இறந்தனர்.திருப்பாலைவனம் போலீசார் வந்து இருவரையும் மீட்டு  மருத்துவமனைக்கு  அனுப்பினர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

மோடி ஆட்சியில் எங்கு பார்த்தாலும் அதானி – அம்பானி பெயர் மட்டுமே தெரிகிறது: ராகுல் காந்தி கடும் தாக்கு

பொது இடங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டினால் ₹5000 அபராதம் அமல்: திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டம்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை