நீடமங்கலம் : நீடாமங்கலம் அருகே ஆதனூர் தேவர்குளம் பகுதியில் வசித்து வருபவர் குணசீலன்(65). இவர் கடந்த 5ம் தேதி கோவையில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் மாலை இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பின்புற கதவு கடப்பாரையால் உடைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் உள்ளே சென்று பார்க்கையில் இரண்டு மர பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்க செயின், தோடு, மோதிரம், கை செயின் உள்ளிட்ட சுமார் 7 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம் காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் வெளிநாட்டில் உள்ள தனது மருமகள் நகைகளும் அதில் மாயமாயிருந்தது தெரிந்தது. மொத்தத்தில் திருடு போனது 20 பவுன் நகை இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். திருவாரூரிலிருந்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். நேற்று முன் தினம் இரவு குணசீலன் நீடமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து வீட்டில் திருடிய மர்ம நபர்கள் உள்ளூரை சேர்ந்தவர்களா? வெயியூரை சேர்தவர்களா? என விசாரித்து வருகின்றனர்….