சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: பருவமழை நிவாரண பணிகளை மேற்கொள்ளும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்துக்க மழை நிவாரணப் பணிகளை கண்காணிக்கும் வகையில் சிறப்பு அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் அமுதா, சென்னை தெற்கு பகுதிக்கு சிறப்பு அதிகாரியாக போக்குவரத்து துறை செயலாளர் கோபால், சென்னை வடக்கு பகுதிக்கு சிறப்பு அதிகாரியாக உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், சென்னை மத்திய மண்டல கண்காணிப்பு அதிகாரியாக சிஎம்டி, டிட்கோ முதன்மை செயலாளர் பங்கஜ்குமார் பன்சால் ஆகிய 4 பேரை சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….