நிலுவை வழக்குகளுக்கு ‘தனிப்படை’

மதுரை, செப்.17: மதுரையில் நீண்ட நாட்களாக கண்டுபிடிக்க முடியாத வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் நகர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கமிஷனர் லோகநாதன் கூறும்போது, ‘‘மதுரை மாநகர காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக கண்டுபிடிக்கப்படாத குற்ற வழக்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை