நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி

மதுரை. ஜூன் 8: நிலம் வாங்கி தருவதாக, பணம் பெற்று மோசடி செய்தவர் மீது, நீதிமன்ற உத்தரவுப்படி அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் ஜெயமங்கலம்(63). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கண்ணன், சென்னையில் ஒரு பிளாட் வாங்கினால் மற்றொரு பிளாட் இலவசம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயமங்கலம், ரூ.1.64 லட்சத்தை கண்ணனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய கண்ணன், நிலத்தையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக ஜெயமங்கலம் மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் உத்தரவுப்படி கண்ணன் மீது அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை