Friday, July 5, 2024
Home » நிலத்தகராறு வழக்கு.. மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன், மகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு!!

நிலத்தகராறு வழக்கு.. மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன், மகளுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு!!

by kannappan

சென்னை : சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம்  மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில்  ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு  சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரியா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த  மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர்கள் முன் ஜாமீன் கோரி  உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 6 வருடங்களுக்கு முன்பான சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டு, அதன் பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அரசியல் உள்நோக்கத்தோடு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு  விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். அப்போது, புகார்தாரரான மகேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்னாள்,  அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகனுக்கு நிபந்தபனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டரார். இருவரும் 2 வாரங்களுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு தினசரி ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று  உத்தரவிட்டார்….

You may also like

Leave a Comment

fourteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi