நிலக்கோட்டை அருகே ரூ.12.61 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி மையம்

நிலக்கோட்டை, அக்.22: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டூர் ஊராட்சி சங்கால்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22 கீழ் ரூ12.61 இலட்சம் ஒதுக்கப்பட்டு புதிய நவீன அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.

இதனை நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கலகாலபாண்டியன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகாலபாண்டியன், துணைத் தலைவர் கீதா, ஊராட்சி செயலர் பாண்டியராஜன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு அமைப்பாளர் ஜான்போஸ்கோ, அம்மையநாயக்கனூர் பேரூர் செயலாளர் விஜயக்குமார், ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜாங்கம், வேல்முருகன், செல்வம்,பாலசந்திரன், மலையாளம் மற்றும் திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related posts

சட்டப்பேரவை குழு விருதுநகரில் இன்று ஆய்வு

நரிக்குடி அருகே ரேஷன் பொருட்கள் வாங்க கண்மாய் நீரை கடந்து செல்லும் கிராமமக்கள்: ஊரில் புதிய கடை திறக்கப்படுமா?

சிவகாசியில் மாநில அளவிலான கராத்தே போட்டி