அரூர், செப்.25: மொரப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நிலக்கடலை அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன் பயிரிடப்பட்ட நிலக்கடலை, தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்த வருடம் பருவமழை, கோடைமழை எதுவும் சரியாக பெய்யாததால், நிலக்கடலை விளைச்சல் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் ஏக்கருக்கு 10 மூட்டை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.