ராசிபுரம், ஜூலை 20: ராசிபுரம் நகரில் ஆண்டு முழுவதும் கம்பம் உடைய நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இந்த கோயிலில் வேண்டுதல் வைத்து வணங்கி சென்றால் பிரார்த்தனை நிறைவேறுகிறது என்பது ஐதீகம். முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும், காய்கறி அலங்காரம், அன்னபாபிஷேகம், ஐப்பசி மாதத்தில் தேர் திருவிழா, பூமிதி திருவிழா உள்ளிட்டவை நடப்பது வழக்கம். அதேபோல ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையான நேற்று, அம்மனுக்கு சமயபுரத்தாள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.