திருப்புத்தூர், செப். 20: சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த சேவுகரத்தினம் மகன் பார்த்திபன் (28). இவர் திருப்புத்தூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வேலையிலிருந்து நின்றுவிட்டார். ஆனால், அந்த நிறுவனத்தில் பார்த்திபன் பணிபுரிந்த காலத்தில் வாடிக்கையாளர்கள் 53 பேரிடம் இருந்து வசூலித்த ரூ.4.60 லட்சம் ரொக்க பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து அந்த நிறுவன மேலாளர் வீரைய்யா (36) திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை நேற்று முன்தினம் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.