நாளை ரேசன் குறைதீர் கூட்டம்

சிவகங்கை, செப்.13: சிவகங்கை மாவட்டத்தில் ரேசன் நுகர்வோர் சிறப்பு முகாம் நாளை நடக்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ரேசன் நுகர்வோர் சிறப்பு முகாம் நாளை, காலை 10மணி முதல் பகல் 1மணி வரை நடக்க உள்ளது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகலட்டை கோருதல், செல் எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை இம்முகாமில் தெரிவிக்கலாம். இதில் குடும்ப அட்டை தாரர்கள் கலந்துகொண்டு ரேசன் விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்