Sunday, September 8, 2024
Home » நாளை காலை 10.30 மணி முதல் 3.15 மணி வரை சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து

நாளை காலை 10.30 மணி முதல் 3.15 மணி வரை சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து

by Karthik Yash

சென்னை, மார்ச் 2: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை முதல் மதியம் வரை சென்னை கடற்கரை – தாம்பரம் – சென்னை கடற்கரை இடையே புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 10.30 மணி மதியம் 3.15 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, காலை 10.30, 10.40, 10.50, 11.10, 11.20, 11.30, 11.40 மற்றும் மதியம் 12, 12.10, 12.20, 12.40, 1.15, 1.30 மற்றும் மதியம் 2, 2.30 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் நோக்கி புறப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், காலை 11, 11.50 மற்றும் மதியம் 12.30, 12.50, 1.35, 2.15 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மறு மார்க்கத்தில் காலை 10.5, 10.15, 10.25, 10.45, 10.55, 11.5, 11.25, 11.35 மற்றும் மதியம் 12, 12.15, 12.45, 1.30, 1.45, மற்றும் 2.15 மற்றும் மாலை 4.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் காலை 9.40, 10.55, 11.5, 11.30 மற்றும் மதியம் 12, 1 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்திலிருந்து காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் ரத்து செய்யப்படுகிறது.

பயணிகளின் வசதிக்காக தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு வரை காலை 11.55, 12.45 மற்றும் மதியம் 1.35, 1.45, 1.55 மற்றும் 2.40, 2.55 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் செங்கபட்டு – தாம்பரம் இடையே காலை 9.40, 9.30, 10.55, 11.5 மற்றும் 11.30, 12, 1 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க போக்குவரத்து கழகத்திடமும், மெட்ரோ ரயில் நிர்வாகத்திடமும் தெற்கு ரயில்வே கோரிக்கை வைத்துள்ளது.

You may also like

Leave a Comment

twelve − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi