நால்ரோடு செங்கரையில் புதிய கலையரங்கம் திறப்பு

காரைக்குடி, ஜூலை 5: காரைக்குடி அருகே பெரியகோட்டை ஊராட்சி நால்ரோடு செங்கரையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7.50 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் மக்களுக்கு பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் எம்எல்ஏ மாங்குடி புதிய கலையரங்கத்தை மக்களுக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்து பேசுகையில், கிராமப்புறங்கள் தன்னிறைவு பெற வேண்டும், கிராமப்புற மக்களுக்கும் நகரங்களுக்கு இணையான வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, புதுவயல் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். உடனடியாக இதற்கான பணிகள் முடிந்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இந்த தீயணைப்பு நிலையம் புதுவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மிகவும் பயனாக அமையும். அதேபோல் புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்களின் தேவைகள் குறித்து சட்டமன்றத்தில் கூறியுள்ளேன். மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை