நாரணாபுரம் பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்: மக்கள் கோரிக்கை

 

சிவகாசி, செப்.23: சிவகாசி அருகே நாரணாபுரம் பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசி அருகே நாரணாபுரம் முனியசாமி கோயிலில் இருந்து நாரணாபுரம் அரசு பள்ளி செல்லும் வகையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கொண்ட தார்ச்சாலை உள்ளது. இந்த தார்சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. தற்போது சாலை மிகவும் சேதமடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

சாலையின் பெரும்பாலான பகுதிகள் முற்றிலும் சேதமடைந்து ரோடு இல்லாத அளவிற்கு மோசமானதாக உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி காணப்படும். இதனால் முற்றிலும் போக்குவரத்து தடை ஏற்படும்.இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இந்த சாலையை மழைக்காலத்துக்குள் சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை