நாய் குறுக்கே வந்ததால் விபத்துவாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

காரமடை, ஏப்.9: மேட்டுப்பாளையம் காரமடை அருகே தாளத்துறை டி.ஆர்.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (45). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி மகேஸ்வரி (41). இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கவேல், தனக்கு சொந்தமான மூன்று சக்கர வாகனத்தில் மனைவி மகேஸ்வரியை அழைத்துக்கொண்டு பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள உறவினர் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் இருந்து காரமடை சாலை அருகே சென்ற போது, திடீரென வாகனத்தின் குறுக்கே நாய் வந்து மோதியது. இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தங்கவேலுவிற்கு லேசான காயமும், அவரது மனைவி மகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. இதையறிந்த காரமடை போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்த மகேஸ்வரியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை