நாய் கடித்ததில் 2 பேர் காயம்

 

திருப்பூர், ஜூலை 2: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் ஆட்டோ டிரைவர் ஒருவர் மது அருந்த சென்றுள்ளார். தன்னுடன் அழைத்துச் சென்ற நாயை மதுபான கடைக்கு வெளியே கட்டி விட்டு சென்றுள்ளார். திடீரென நாய் தனது கட்டை அவிழ்த்துவிட்டு சாலையில் நடந்து சென்ற இருவரை கடித்துள்ளது.

இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து சாலையில் செல்வோரை எல்லாம் பார்த்து குறைத்தபடி கடிக்க பாய்ந்துள்ளது. இதுகுறித்து தகவலின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தனியார் அமைப்பினர் உடனடியாக நாயை பிடித்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்