நாமக்கல்: நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிந்து புதையுண்ட இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்ணில் புதைந்து உயிருக்கு போராடிய இருவரையும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …