நாமக்கல், ஜன.26: நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காலை 8.05 மணிக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட கலெக்டர் உமா தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். அதனை தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய பல்வேறுத்துறை அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார்.
மேலும், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளை கவுரவிக்கிறார். குடியரசு தின விழாவையொட்டி, பள்ளி மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்பி ராஜேஸ்கண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.