Sunday, June 30, 2024
Home » நாமகிரிப்பேட்டையில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்-மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை

நாமகிரிப்பேட்டையில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்-மகசூல் குறைவால் விவசாயிகள் கவலை

by kannappan

நாமகிரிப்பேட்டை :  நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளான சீராப்பள்ளி, ஆர்.புதுப்பட்டி, கார்கூடல்பட்டி, பிலிப்பாக்குட்டை, முள்ளுக்குறிச்சி, உரம்பு, மங்களபுரம், ஆயில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பரவலாக நிலக்கடலை சகுபடி செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்  நிலக்கடலை விதைப்பு போட்டனர். கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் நிலக்கடலை செடிகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலக்கடலையை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: காய்ந்த நிலக்கடலை கிலோ ₹80க்கு விற்கப்படுகிறது.அதை வாங்கி உடைத்து, நிலத்தில் ஏர் ஓட்டி விதைப்பு செய்கிறோம். ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 46 கிலோ தேவைப்படுகிறது. மேலும் வயல்களில் களை எடுத்தல், உரம், நீர் பாய்சுதல் போன்ற பணிகள் செய்தால் ஏக்கருக்கு ₹15ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது நல்ல மழை பெய்து வருவதால், செடிகள் நன்கு வளர்ந்து காய் பிடிக்க தொடங்கியது. ஆனால் தற்போது பச்சை நிலக்கடலை, 46 கிலோ கொண்ட ஒரு முட்டை ₹1500 முதல் ₹1700 வரை மட்டுமே விலை போகிறது. மேலும் ஒரு ஏக்கருக்கு 15 மூட்டைகள் முதல் 18 மூட்டைகள் வரை மகசூல் கிடைப்பதே அரிதாக உள்ளது. மேலும் சில்லறை வியாபாரிகள், கிலோ ஒன்றுக்கு ₹15 முதல் ₹20க்கு என குறைவான விலைக்கு வாங்கி செல்லுவதால், பெரும் நஷ்டம் எற்படுகிறது. இவ்வாறு கூறினர்….

You may also like

Leave a Comment

eleven − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi