நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ஏரிகள் நிரம்பவில்லை. இதனால்இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே ஏரி, மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்யும் மழை நீர் கால்வாய்கள் வழியாக சென்று நீர்நிலைக்கு செல்லும். ஆனால் இந்த மழைநீர் கால்வாய்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பொதுப்பணித்துறையினர் ஏரி மற்றும் கால்வாய்களை தூர் வாராததால் தற்போது பெய்துவரும் கனமழையிலும் ஏரிகள் நிரம்பாமல் பல ஏரிகள் வறண்டு காணப்படுகிறது.இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.மேலும் ஏரிகளுக்கு மழை நீர் செல்லும் கால்வாய்களை தூர்வாரி ஏரியில் மழை நீர் சேகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்….