புதுடெல்லி: நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளை எதிர்கொண்டு அவற்றை நாம் முறியடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறைகூவல் விடுத்தார். இந்திய கடற்படையின் சார்பில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் மோடி காணொலி வாயிலாக பேசுகையில், ‘‘தற்போது தேச பாதுகாப்பு என்பது நமது எல்லைகளோடு மட்டும் நின்று விடுவது இல்லை. ஆனால் அதை விட பரந்த எல்லைகளை கொண்டுள்ளது. ராணுவ பலத்தை வலுவடைய செய்ய ராணுவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றுவதன் மூலமே நாட்டின் ராணுவ திறனை அதிகரிக்க செய்ய முடியும். நாட்டுக்கு எதிராக தவறான மற்றும் அவதுாறான பிரசாரங்கள் நடந்து வருகின்றன. இந்தியாவுக்கு எதிராக நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து நாட்டு நலன்களுக்கு எதிராக செயல்படும் சக்திகளை முறியடிக்க வேண்டும். நாட்டின் ராணுவ தேவைகளுக்கான கருவிகளை உற்பத்தி செய்வதற்கு புதிய கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளது. ’’ என்றார்….