நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் அதிரடி கைது: தப்பி ஓடிய 3 பேருக்கு போலீசார் வலை

 

உளுந்தூர்பேட்டை, அக்.9: உளுந்தூர்பேட்டை அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணபாலன், எலவனாசூர்கோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எறையூர்பாளையத்தில் இருந்து எல்லை கிராமம் செல்லும் சாலையில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு பேரை போலீசார் விசாரணை செய்ய முயன்றனர்.

அப்போது அவர்கள் தப்பி ஓடியதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார் மற்ற மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆப்ரஹாம் மகன் குழந்தைராஜ் (35) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த ஒரு நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய இதே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைராஜ் என்கின்ற சின்ன நண்டு, சகாயம், கென்னடி ஆகிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி