நாட்டிலேயே முதல்முறையாக சென்னை காவல் துறைக்கென நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவை உருவாக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

சென்னை : நாட்டிலேயே முதல்முறையாக சென்னை காவல் துறைக்கென நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவை உருவாக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னையில் கூட்டமான இடங்களையும் நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்கான ரூ. 3.60 கோடி செலவில் நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவு அமைக்கப்படும் என கடந்த பேரவைக் கூட்டத் தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி பொதுமக்களுக்கு உடனடியாக உதவுவதற்கு ஏதுவாக எச்.டி. கேமராக்கள் மற்றும் இரவு நேரமும் காட்சிகளை பதவி செய்யும் வகையிலான கேமராக்களுடன் கூடிய விமானங்கள் உட்பட 3 விதமான 9 ஆளில்லா விமானங்களை கையகப்படுத்த சென்னை காவல்துறை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைஅலுவலகம் ஒன்றை அமைக்கவும் அறிவுறுத்தி இருந்தனர். தமிழ்நாடு காவல்துறை தலைவர் இதனை அங்கீகரித்து அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார். அதன் அடிப்படையில் தற்போது சென்னை காவல்துறைக்கென நடமாடும் ஆளில்லா விமான காவல் பிரிவை உருவாக்க நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் உள்ள ஆளில்லா விமான பிரிவுத் துறையுடன் இணைந்து செயல்படுமாறு டிஜிபிவிற்கு உள்துறை செயலாளர் பிரபாகரன் அறிவுறுத்தி உள்ளார்.   …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்