புதுடெல்லி: தூய்மையில் இந்தியா புதிய அத்தியாயங்களை எழுதி வருவதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விவரங்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பான வரைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார். பிரதமர் மோடி தனது பதிவில், ‘‘தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 11.5 கோடி வீடுகள், 58 ஆயிரம் கிராமங்கள், 3,300 நகரங்களில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத வகையில் மாற்றப்பட்டு, கழிவறைகள் கட்டித்தரப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் வளர்ச்சியில் பொதுமக்களின் பங்களிப்பானது எவ்வாறு புதிய ஆற்றலை பூர்த்தி செய்ய முடியும் என்பதை தூய்மை இந்தியா திட்டம் எடுத்துக்காட்டுகின்றது.கழிவறைகளை கட்டி தருவது, குப்பைகளை அகற்றுவது, வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரியத்தை பாதுகாப்பது, தூய்மைக்கான போட்டி என எதுவாக இருந்தாலும் நாடு புதிய அத்தியாயத்தை எழுதுகின்றது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நாளை மறுநாள் சீக்கிய மத குரு தேக் பகதூர் ஜீயின் 400வது பிறந்தநாளையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மேலும் இந்த விழாவின்போது தேக் பகதூர் நினைவு நாணயம் மற்றும் சிறப்பு தபால் தலையையும் அவர் வெளியிடுகிறார். …