நாடு முழுவதும் 35,178 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா  பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,22,85,857 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் சதவீதம் 97.52 ஆக உள்ளது. நோய் பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 440  பேர் இறந்துள்ளனர். மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கையானது 4,32,519ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது 3,67,415ஆக குறைந்துள்ளது. இது கடந்த 148நாட்களில் குறைந்தபட்ச எண்ணிக்கையாகும். ஒரு நாளைக்கு 1.96 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் மட்டும் 17,97,559 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 49,84,27,083 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. …

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு