நாடகம் பார்ப்பதில் தகராறு 4 பேர் கைது

சேந்தமங்கலம், ஆக.30: சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் கடந்த புதன்கிழமை நாடகம் நடைபெற்றது. அப்போது நாடகம் பார்த்துக் கொண்டிருந்த இரு தரப்பைச் சேர்ந்த வாலிபர்கள் தகராறு செய்து, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தகராறில் ஈடுபட்ட ஜோதீஸ்வரன் (26), நிர்மல்ராஜா (36), நவீன்குமார் (19), நிஷாந்த் (20) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்