சென்னை: பாஜவின் தந்திரத்துக்கு அதிமுக பலியாகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறினார். திருவள்ளூர் மாவட்ட திமுக, பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமை வகித்தார்.இதில் பங்கேற்ற திமுக தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : ஓபிஎஸ்சை ஓரம் கட்டுவதாக கருதி கொண்டிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி இடைசெறுகலாக வந்தவர், இவருக்கு பின்னால் பாஜ விளையாட்டு இருக்கிறது. இன்று மராட்டியத்தில் செய்கிற வேலையை நாளை தமிழகத்தில் அவர்கள் செய்வார்கள். செல்வாக்கு உள்ள கட்சியை உடைப்பதும், உருக்குலைப்பதும், ஊடுருவுவதும் பாஜவின் லாஜிக் அதில் அதிமுக பலியாகியிருக்கிறது என்றார்….