நெல்லை, டிச. 25: நாங்குநேரி யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்கள் அனைத்தையும் கணக்கெடுத்து வேகமாக சீர்செய்ய நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். இதன் எதிரொலியாக பெரும்பாலான சாலைகள், பாலங்கள் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. விரைவில் நிரந்தரமாக அடுத்த சில நாட்களில் சீரமைக்கப்படும் என்று யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின் தெரிவித்துள்ளார்.