நாங்குநேரி அருகே பைக் வாங்கி தர மறுத்த தந்தையை தாக்கிய மகன் கைது

களக்காடு,அக்.6: நாங்குநேரி அருகே பைக் வாங்கி தர மறுத்த தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர். நாங்குநேரி அருகே கலுங்கடி நடுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி ஏசுதாஸ் (43). இவரது மகன் செல்வசகாயம் (19). செல்வசகாயம் தனது தந்தை ஏசுதாஸிடம் பைக் வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் பைக் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் தந்தை மகனுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பவத்தன்று செல்வசகாயம், தனது தந்தை ஏசுதாஸை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் நாங்குநேரி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வசகாயத்தை கைது செய்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை