நாகுடி பகுதியில் மது விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

அறந்தாங்கி,செப்.24: நாகுடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதியில் சட்ட விரோதமாக வீட்டிலும் கடைகளிலும் மறைமுகமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்படி மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே அறிவுறுத்தலின்படி நாகுடி போலீசார் வீடு, கடைகளில் சோதணை மேற்கொண்டனர்.

அப்போது நாகுடியில் வீட்டில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பணை செய்து வந்த நாகுடி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பவானி(38), சிவராஜ் (38), அய்யாக்கண்ணு (60), குமரேசன் (32) ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 100 மது பாட்டில்களையும், 3 செல்போன், 1 பைக், ரூ.2 ஆயிரத்து 500 ரொக்க பணம் பறிமுதல் செய்து, 4 பேரையும் சிறையில் அடைத்தனர். பெண் மது பாட்டில் விற்பணை செய்ததால் கைது சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்