நாகர்கோவில், செப்.28 : அண்ணா பிறந்தநாளையொட்டி 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் வாடுபவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் தனபால், பரமேஸ்வரன், மரிய செல்வன், கனி, சேது மாதவன் தம்பி , மேரி ஸ்டெல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.