நாகர்கோவிலில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், நவ. 21: தென் மாவட்டங்களில் தொடரும் படுகொலைகளை கண்டித்தும், படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வடசேரி அண்ணா சிலை அருகில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜன், மாவட்ட பொருளாளர் பேரின்பதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஐசக், மூர்த்தி, செல்வம், அழகை கண்ணன், சுமன் பாண்டியன், அச்சுதன், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாகர்கோவில் மாநகர செயலாளர் இந்திரா குமார் நன்றி கூறினார்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்