நாகர்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக். 8: பாலஸ்தீனம் மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வலியுறுத்தி குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டுக்குழு சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்(விடுதலை) மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மலைவிளை பாசி, அகமது உசேன், உஷாபாசி, என்.எஸ்.கண்ணன், ரவி, மாணிக்கவாசகம், தங்க மோகனன், மனோகர ஜஸ்டஸ், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்