நாகப்பட்டினம் மாவட்டத்தில் திடீர் மழை

 

நாகப்பட்டினம்,ஜன.20: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்தது. தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, ராமர்மடம், பூவைத்தேடி, காமேஸ்வரம், வைரவன்காடு, மணல்மேடு, திருப்பூண்டி, விழுந்தமாவடி, பறவை உள்ளிட்ட இடங்களில் மழை செய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தற்பொழுது பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில்மழை பெய்தால் சம்பா நெற்கதிர்கள் சாய்ந்து சேதம் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்