நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் பெரிய மூட்டையால் பொதுமக்கள் பீதி

நாகை: நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் கிடந்த பெரிய துணி மூட்டையால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை புதிய பஸ் நிலையத்தில் பட்டுக்கோட்டை, தூத்துக்குடி செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தில் துணியால் சுற்றிய மூட்டை கிடந்தது. அந்த மூட்டையில் அனுப்புனர் முகவரியில் வேதாரண்யம் தோப்புத்துறை சேர்ந்த முகவரியும் பெறுநர் முகவரியில் சிவபாலகிருஷ்ணன், தீபா, ஏ/9, திருமுறுகண்டி, எண் 31, முல்லைத்தீவு, லங்கா, செல்போன் எண் 0775228358 என்ற முகவரியும் இருந்தது. இதை பார்த்த பயணிகள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வெளிப்பாளையம் போலீசார் மற்றும் க்யூ பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துணியால் சுற்றிய மூட்டையை பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதைதொடர்ந்து 3 மணி நேர விசாரணைக்கு பின் துணியால் சுற்றிய மூட்டையை கைப்பற்றி வெளிப்பாளையம் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்று பிரித்து பார்த்தனர். அதில் பயன்படுத்தப்பட்ட பழைய துணிகள் மட்டுமே இருந்தது. இதைதொடர்ந்து மூட்டையில் இருந்த முகவரிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு

குமரியில் மக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்திய 33 பேர் மீது வழக்கு பதிவு