நாகப்பட்டினம் கலெக்டர் ஆய்வு சீர்காழி, கொள்ளிடம் செம்பனார்கோயில், பொறையாறு பகுதியில் மின்விநியோகம் நாளை நிறுத்தம்

சீர்காழி,ஜூலை 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், ஆச்சாள்புரம், அரசூர் எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நாளை (6ம்தேதி) மேற்கொள்ளபட உள்ளது. இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெரும் சீர்காழி நகரம் முழுவதும், சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையார், பழையபாளையம், திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு நாளை (6ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

செம்பனார்கோயில்: செம்பனார்கோயில் அருகே கிடாரங்கொண்டான் துணை மின் நிலையத்தில் நாளை (6ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் கிடாரங்கொண்டான், செம்பனார்கோயில், மேலப்பாதி, பரசலூர் மெயின்ரோடு, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், ஆக்கூர், மடப்புரம், கருவி, செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, நத்தம், காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை (6ம்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. பொறையாறு: இதேபோல் பொறையாறு துணை மின் நிலையத்தில் நாளை (6ம்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி , திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்னப்பமூலை, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டிசாத்தனூர், கண்னங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர், ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை செம்பனார்கோயில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் தெரிவித்துள்ளார்.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை