நாகப்பட்டினம் அருகே பைக்குகள் பயங்கர மோதல்: தொழிலாளி சாவு

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சிங்கமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த அஞ்சான் மகன் முருகையன் (50). விவசாய கூலி தொழிலாளி. இவர் கடந்த 7ம்தேதி காலை இறையான்குடிக்கு பைக்கில் சென்றார். அப்போது எதிரே, சிங்கமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த அப்பாசாமி மகன் கண்ணதாசன் (30) என்பவர் ஓட்டிவந்த பைக், இறையான்குடி அருகே முருகையின் பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தோர் இருவரையும் மீட்டு தேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முருகையன் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகையன் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த கண்ணதாசன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செ ய்து வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு