நாகப்பட்டினம்,ஆக.10: கார்ப்பரேட் கொள்ளையர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் சுப்பிரமணியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடத்திய நாளில் (ஆகஸ்ட் 9ம் தேதி) கார்ப்பரேட் கொள்ளையர்கள் இந்திய நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.