நாகப்பட்டினத்தில் பெரியார் பிறந்தநாள் விழா

 

நாகப்பட்டினம்,செப்.18: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட திக சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் மாவட்ட திக தலைவர் நெப்போலியன் தலைமை வகித்தார். செயலாளர் புபேஷ்குப்தா முன்னிலை வகித்தார். நாகப்பட்டினம் கோட்டைவாசல் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் மாலை அணிவித்தார்.

நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, திக மாநில இளைஞர் அணி செயலாளர் நார்திக பொன்முடி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், திமுக நகர துணை செயலாளர்கள் சிவா, திலகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானாவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்