நாகப்பட்டினத்தில் தூய்மை பணியாளர்கள் கவுரவிப்பு

 

நாகப்பட்டினம், செப். 11: தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் நகர பகுதியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் சார்பில் தூய்மை பணியாளர்களை பெருமைபடுத்தும் நிகழ்ச்சி நகராட்சிகள் நிர்வாகம், தஞ்சாவூர் மண்டலத்துக்கு உட்பட்ட நகராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் தூய்மை பணியாளர்கள் பணியில் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கும் வகையிலும், சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை பராட்டி சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நாகப்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் திருமால்செல்வம் முன்னிலை வகித்தார். இதில், தூய்மை பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை