நள்ளிரவு மது விருந்தில் வாலிபர் குத்திக்கொலை: நண்பன் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் கவுதமபேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் முகேஷ்வரன்(21). இவருக்கு திருமணமாகி கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது‌. இதற்காக நண்பர் விஜய் பிரசாந்த்(21), அஜய்பாலா ஆகியோருக்கு நேற்று முன்தினம் இரவு முகேஷ்வரன் மது விருந்து வைத்தார். மூவரும் கவுதம் பேட்டையில் உள்ள பூங்காவில் நள்ளிரவு 1 மணி அளவில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது, முகேஷ்வரன், விஜய் பிரசாந்த் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர். விஜய் பிரசாந்த் தாக்கியதில் முகேஷ்வரனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் கத்தியால் விஜய் பிரசாந்தின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து முகேஷ்வரனை கைது செய்தனர். …

Related posts

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்

பேரனுக்கு பதிலாக நடந்த மூதாட்டி கொலை வழக்கில் உறவுக்கார பெண் சிக்கினார்

இளம்பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி ஊர், ஊராக அழைத்துச் சென்று சித்ரவதை: ஜம்முவில் வாலிபர் கைது