நல்லூர் பகுதி கழக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

திருப்பூர்,பிப்.5:நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் தெற்கு மாநகரம் வாலிபாளையம் நல்லூர் பகுதி கழகத்திற்கு உட்பட்ட பகுதி கழக நிர்வாகிகள் வட்ட கழக நிர்வாகிகள், பிஎல்ஏ 2 பாக முகவர்கள் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளரும், தெற்கு தொகுதி செல்வராஜ் எம்.எல்.ஏ.தலைமையில் வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது.

தெற்கு தொகுதி தேர்தல் பார்வையாளர் தென்றல் செல்வராஜ், மாநகர செயலாளர் டி.கே.டி.மு‌.நாகராசன் முன்னிலை வகித்தனர்.இதில் தெற்கு மாநகர துணை செயலாளர் பி.ஆர்.செந்தில்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் டிஜிட்டல்சேகர், வடக்கு மாநகர அவை தலைவர் ஈஸ்வரமூர்த்தி,பகுதி கழகச் செயலாளர்கள் மு.க.உசேன்,மேங்கோ பழனிச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் சூர்யா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை