நலத்திட்ட உதவி வழங்கல்

நிலக்கோட்டை, ஏப். 7: ஆத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள சடையாண்டி கோயில் பகுதி மலைத்தோட்ட விவசாயிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைவர் பாக்கியராஜ் தலைமை வகிக்க, செயலாளர் கஸ்தூரிராஜா, பொருளாளர் சீனி ராஜன் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகி ஜோஸ்வா வரவேற்றார். விழாவில் 50க்கும் மேற்பட்ட மலைத்தோட்ட தொழிலாளர்களுக்கு அரிசி, காய்கறிகள், ஊட்டச்சத்து உணவு பொருட்கள், போர்வைகள் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஜெர்மன் ராஜா, முரளி, வினோத், செந்தில்குமார், ஆண்டவர், திருச்செல்வம், சலோமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி சாந்தினி நன்றி கூறினார்.

Related posts

சமயபுரம் டோல்கேட்டில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை அருகே கார்-மினிலாரி மோதல் திருச்சியை சேர்ந்த இருவர் பரிதாப பலி

பலப்படுத்தும் பணி தீவிரம் தொட்டியம் அருகே மரத்திலிருந்து குதித்த சிறுவன் உயிரிழப்பு