நலத்திட்ட உதவி வழங்கல்

 

சிவகங்கை, ஜூலை 2: சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய ரேசன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 576 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷாஅஜித் அறிவுறுத்தினார்.

இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் ரூ.31.3லட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்கள், கடனுதவி, உதவித்தொகை, இழப்பீடு உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் பனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்