நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 

மஞ்சூர்: மஞ்சூரில் காந்தி சேவா அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலம் மாணவ, மாணவிகள், ஏழை, எளிய பெண்களுக்கு தையல், கணிணி உள்ளிட்ட பல்வேறு தொழிற் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறக்கட்டளை சார்பில் நேற்று விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் நீலகிரி வாசுதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் போஜன் முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் குந்தா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆசிரியர் லட்சுமணன், ஆசிரியர் ஆலன், பிரம்ம குமாரிகள் சமாஜத்தை சேர்ந்த நிர்வாகி முத்துமாரி, அறக்கட்டளை நிர்வாகி காந்தி மற்றும் பயிற்சி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி