Sunday, September 22, 2024
Home » நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

by Francis

 

மஞ்சூர்: மஞ்சூரில் காந்தி சேவா அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலம் மாணவ, மாணவிகள், ஏழை, எளிய பெண்களுக்கு தையல், கணிணி உள்ளிட்ட பல்வேறு தொழிற் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அறக்கட்டளை சார்பில் நேற்று விழா நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் நீலகிரி வாசுதேவன் தலைமை தாங்கினார். செயலாளர் போஜன் முன்னிலை வகித்தார்.

இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகள், ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் குந்தா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆசிரியர் லட்சுமணன், ஆசிரியர் ஆலன், பிரம்ம குமாரிகள் சமாஜத்தை சேர்ந்த நிர்வாகி முத்துமாரி, அறக்கட்டளை நிர்வாகி காந்தி மற்றும் பயிற்சி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

4 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi