நர்சிடம் 9 பவுன் திருட்டு

 

திருச்சி, ஜூலை 21: திருச்சியில் நர்சிடம் 9 பவுன் நகையை பறித்து சென்ற நபரை போலீசார் தேடுகின்றனர். திருச்சி கே.கே.நகர் புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் கவிதா (48). இவர் ரயில்வே மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12ம் தேதி சேலம் செல்வதற்காக திருச்சி டோல்கேட் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த தனியார் பஸ்சில் ஏறிய அவர் தனது கைப்பையை பார்த்தபோது, மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் செயின், வளையல் உள்பட 9 பவுன் நகைகள் இருந்தது. இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Related posts

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு

செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம்