நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி செல்போன், ஏடிஎம் கார்டு பறிப்பு: மர்மநபர்களுக்கு போலீஸ் வலை

 

திருச்சுழி, ஏப்.26: நரிக்குடி அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டி செல்போன், ஏடிஎம் கார்டை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள பனைக்குடியை சேர்ந்த பாலசண்முகம் மகன் ஜெயசங்கர்(30), கட்டிட தொழிலாளி. இவர் பனைக்குடி டாஸ்மாக் கடையருகே மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் இரண்டு மர்மநபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜெயசங்கரிடம் சிறிது நேரம் பேச்சுக் கொடுத்தனர்.

பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெயசங்கரின் தலையில் வெட்டினர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். உடனடியாக அவரிடமிருந்த விலை உயர்ந்த செல்போன், ஏடிஎம் கார்டை பறித்துக்கொண்டு, டூவீலரை அங்கேயே போட்டுவிட்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நரிக்குடி போலீசார் மர்ம நபர்கள் விட்டுச் சென்ற டூவீலரை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த டூவீலரின் பதிவு எண்ணை வாலிபரை தாக்கி செல்போன், ஏடிஎம் கார்டை பறித்துச் சென்ற மர்ம நபர்களை நரிக்குடி போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

பயிர் காப்பீடு செய்வது அவசியம்; வேளாண்துறை அழைப்பு

கப்பலூர் டோல்கேட்டை கடந்து செல்ல இரு அரசு பஸ்களுக்கு அனுமதி மறுப்பு பாஸ்டேக்கில் பணம் இல்லாததால்: இரவு நேரத்தில் பயணிகள் அவதி

திருமங்கலத்தில் பரிதாபம் தனியார் மருத்துவமனையில் ஊசி போட்ட சிறுமி பலி போலீசார் விசாரணை