நம்புதாளையில் பூக்குழி திருவிழா

 

தொண்டி, மே 6: தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஆதின மிளகி அய்யனார், பதினெட்டாம்படி கருப்பர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 26 தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாள் மண்டகபடியார் சிறப்பு பூஜை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்குதல் நேற்று நடைபெற்றது. மேலும் பால் காவடி, பறவை காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்து பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து இளைஞர் மன்றம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு